Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவமான வெற்றியாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 19வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை, 37 வருடங்களாக இலங்கை வாழ் பிரஜைகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த வெற்றி இன்று வாழ்கின்ற பிரஜைகளுக்கு மாத்திரமின்றி, எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையளிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

0 Responses to 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் வெற்றியாகும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com