Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) கலைக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

19வது திருத்தச் சட்டம் நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் பாராளுமன்றத்தை வரும் புதன்கிழமை இரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் பாராளுமன்றத்தை மே மாதம் முதல் வாரத்தில் கலைக்கப்பட்டு, தேர்தலை யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாராளுமன்றம் ஏப்ரல் 29 ஆம் திகதி கலைப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com