Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும், போட்டியிடுவது தொடர்பில் தயக்கமில்லை என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும், நிலையில் அனைத்து கட்சிகளுமே தங்கள் சக்தியை 2016ஆம் ஆண்டு தேர்தலை நோக்கியே இருக்க வேண்டும் என எங்கள் கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட எங்களுக்கு அச்சம் ஏதும் இல்லை. அவசியம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் முடிவை அறிவிப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயக்கம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com