Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.குடாநாட்டில் மதுபானம் பயன்படுத்தும் கலாச்சாரம் இல்லை. பணம் உள்ளவர்கள் விடுதிகளில் மதுபானம் அருந்துகிறார்கள் ஆனால் வறியவர்களும், நாள் கூலிகளுமே வீதிகளில் நின்று மது அருந்துகிறார்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்.சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே குறித்த விடயத்தை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவட்டத்தில் வீதிகளில் நின்று பலர் மதுபானம் அருந்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.குடா நாட்டின் கலாச்சார படி வீடுகளில் இருந்த்து மதுபானம் அருந்துவதில்லை. எனவே வீதிகளில் நின்று குடிக்கிறார்கள் இவ்வாறு குடிப்பவர்கள் நாட் கூலிகளாகவும் வறுமைப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

எனவே அவர்களை கட்டுப்படுத்தும்போது பெரும் பாதிப்புக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். எனினும் நாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார்.

0 Responses to வறியவர்களும் நாள் கூலிகளுமே வீதியில் நின்று மது அருந்துகின்றனர்: யாழ்.பொலிஸார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com