வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டியது அவசியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத்தில் இருப்பவர்களில் பலர் எனது நண்பர்கள். எனினும், அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும். இராணுவத்தினர் எமது காணிகளில் உள்ளனர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதோடு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 6 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற வீதத்தில் இராணுவத்தினர் உள்ளனர். இது மக்களின் வாழ்வுக்கு அழுத்தமாக உள்ளது. நீண்டகாலமாக ஒரு பிரதேசத்தில் இராணுவத்தை நிலை நிறுத்தி வைப்பதன் மூலம் பல்வேறு செயல்கள் நடக்கக்கூடும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாகும். இப்படியான சம்பவங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். மதுபான பாவனை மற்றும் விநியோகம் அதிகரிக்கக்கூடும். விசேட நிபுணர்கள் இவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருப்பவர்களில் பலர் எனது நண்பர்கள். எனினும், அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும். இராணுவத்தினர் எமது காணிகளில் உள்ளனர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதோடு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 6 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற வீதத்தில் இராணுவத்தினர் உள்ளனர். இது மக்களின் வாழ்வுக்கு அழுத்தமாக உள்ளது. நீண்டகாலமாக ஒரு பிரதேசத்தில் இராணுவத்தை நிலை நிறுத்தி வைப்பதன் மூலம் பல்வேறு செயல்கள் நடக்கக்கூடும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாகும். இப்படியான சம்பவங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். மதுபான பாவனை மற்றும் விநியோகம் அதிகரிக்கக்கூடும். விசேட நிபுணர்கள் இவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




0 Responses to வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்