Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் திறனற்ற நிதி முகாமைத்துவத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளதாவது, “2014ஆம் ஆண்டுக்கு முன்னைய வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. இதனால் நாட்டிற்குள் வருகின்ற அந்நிய செலாவணியின் அளவு குறைவடைந்துள்ளது. நல்லாட்சியின் நிலைமை எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் திறனற்ற நிதி முகாமைத்துவத்தின் பெறுபேறே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி அரசின் திறனற்ற நிதி முகாமைத்துவத்தினால் பிரச்சினைகள் அதிகரிப்பு: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com