Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளக விசாரணைக்கான சட்ட வரைவுகள் அகஸ்ட் மாதத்தில் பூர்த்தியாகும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நீதி விசாரணையாளர்கள் அல்லது சர்வதேச விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமைக்கு சர்வதேச விசாரணைகள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணியாளர் புலித்தேவனின் மனைவி இலங்கை அரசாங்கத்திற்கு சேறு பூசும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் போலி சாட்சியமளித்துள்ளதாக அதே பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு போலி சாட்சியமளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலிச் சாட்சியங்களை அளிப்பதற்காக சனல்-4 ஊடகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த நபர்களை ஜெனீவாவிற்கு அழைத்து வந்துள்ளன.

0 Responses to புலித்தேவனின் மனைவி சாட்சியத்தால் குழப்பத்தில் தென்னிலங்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com