Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை தங்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் வெற்றி என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சி பேரவைக்கும், விகாராதிபதி வண.சோபித தேரருக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை கோட்டே நாகவிகாரையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன், “உடனடியாக தேர்தல்முறை மாற்ற 20வதும் திருத்த வர்த்தமானி பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும். அதன்பின்னர் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் புதிய சுற்று பேச்சுக்களை நடத்தி, இரட்டை வாக்கு முறைமையை தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்தில் உள்வாங்கி, அதை பாராளுமன்றம் கொண்டு சென்று சட்டமாக்க முடியும்.

இந்த இரண்டையும் செய்ய முடியாவிட்டால், காலாவதியான பாராளுமன்றத்தை உடன் கலைத்து புதிய தேர்தலை, நடப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்தி, புது பாராளுமன்றத்தை உருவாக்கி, அதில் தேர்தல் சட்டம் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும்.

இன்று நடைபெற்ற பேச்சுக்களையடுத்து மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வண. சோபித தேரர், அரசாங்கத்துக்கு அவற்றை முன் வைத்ததுடன் தொடர்ந்து எம்முடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டுள்ளார்.” என்றுள்ளார்.

இச் சந்திப்பில், சோபித தேரர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, ரிசாத் பதுதீன், டக்ளஸ் தேவானந்தா, சிறிதுங்க ஜெயசூரிய, அசாத் சாலி ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

0 Responses to இரட்டை வாக்கு கோரிக்கையை சோபித தேரர் ஏற்றமை எமக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com