Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 2014ம் ஆண்டுக்கான உலக தீவிரவாதம் சம்பந்தமான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் ஆட்சி காலத்தில் பொது மக்கள் மீதும், சமுக செயற்பட்டாளர்கள் மீதும் புலி முத்திரியை குத்து, கைது செய்வதற்காகவும், துன்புறுத்துவதற்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதற்கு எதிராக அமெரிக்க கடந்த காலங்களில் கண்டனம் தெரிவித்து வந்துள்ளது.

எனினும் புதிய அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகயை எடுப்பதாக தங்களிடம் உறுதி வழங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக அமெரிக்காவிடம் சிறிலங்கா உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com