இந்தோனேசியாவில் நேற்று 54 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜெயபுராவிலிருந்து சென்தானி விமானநிலையத்திலிருந்து ஓக்சிபில் நகருக்கு புறப்பட்ட டிராகானா ஏர் நிறுவன விமானமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அங்குள்ள மலைப்பகுதிகளுடன் மோதி இவ்விமானம் விபத்துக்கு உள்ளானதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளனது. விமானத்தின் உடைந்த இறக்கை உதிரிப்பாகங்கள் சில எங்கு வீழ்ந்திருக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் மீட்புக் குழுவினர் எவரும் விபத்துக்குள்ளான பகுதியை இன்னமும் சென்றடையவில்லை எனவும் இந்தோனேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உள்ளூர் வாசிகள் என இன்னுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 8 மாதங்களில் தென் கிழக்கு ஆசிய விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.
இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜெயபுராவிலிருந்து சென்தானி விமானநிலையத்திலிருந்து ஓக்சிபில் நகருக்கு புறப்பட்ட டிராகானா ஏர் நிறுவன விமானமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அங்குள்ள மலைப்பகுதிகளுடன் மோதி இவ்விமானம் விபத்துக்கு உள்ளானதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளனது. விமானத்தின் உடைந்த இறக்கை உதிரிப்பாகங்கள் சில எங்கு வீழ்ந்திருக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் மீட்புக் குழுவினர் எவரும் விபத்துக்குள்ளான பகுதியை இன்னமும் சென்றடையவில்லை எனவும் இந்தோனேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உள்ளூர் வாசிகள் என இன்னுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 8 மாதங்களில் தென் கிழக்கு ஆசிய விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.
0 Responses to இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது பயணிகள் விமானம் : மலைப்பகுதிகளில் உதிரிப் பாகங்கள் கண்டுபிடிப்பு!