ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விரைவில் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளில், பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு இராணுவ முகாமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பிற்கு கட்டளையிடும் பொறுப்பை நிறைவேற்றிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துகொள்வதற்காக, அவரிடம் விசாரணை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஷ தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கின்றார். அவர் நாடு திரும்பியதும் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுமென தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளில், பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு இராணுவ முகாமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பிற்கு கட்டளையிடும் பொறுப்பை நிறைவேற்றிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துகொள்வதற்காக, அவரிடம் விசாரணை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஷ தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கின்றார். அவர் நாடு திரும்பியதும் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுமென தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
0 Responses to பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை?