நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், உடலுறுப்புக்களை தானம் செய்யவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய எதிர்வரும் 07ஆம் திகதி தீர்க்கமான பதிலை வழங்க வேண்டும் இல்லையென்றால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவை தழுவுவோம். உடலறுப்புக்களை தானம் செய்யும் பொறுப்பினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த இவர்களது போராட்டம் 17ஆம் திகதி வரையில் நீடித்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உத்தரவாதமளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.
தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய எதிர்வரும் 07ஆம் திகதி தீர்க்கமான பதிலை வழங்க வேண்டும் இல்லையென்றால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவை தழுவுவோம். உடலறுப்புக்களை தானம் செய்யும் பொறுப்பினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த இவர்களது போராட்டம் 17ஆம் திகதி வரையில் நீடித்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உத்தரவாதமளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.




0 Responses to ‘பொது மன்னிப்பு’ இல்லையெனில் மீண்டும் போராட்டம்; உடலுறுப்புக்களை தானம் செய்யவும் தமிழ் அரசியல் கைதிகள் தீர்மானம்!