Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக சிறைகளில் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடாத கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விரைவில் இது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடாத தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்: திலக் மாரப்பன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com