Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி என்கிற போதிலும், அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கினை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும் என்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரச தரப்பு வாதத்தை பிரதம நீதியரசர் நிராகரித்துள்ளார்.

இதையடுத்து, இந்த மனு தொடர்பான விளகத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும்: கே.ஸ்ரீபவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com