Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனம் கலைத்து தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “250-இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் நீண்ட காலமாக எவ்வித காரணமும் இன்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடி வருகின்றனர். குறிப்பாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் பல உயர் மட்டத்தினர் அரசியல் செல்வாக்கினால் அரசின் செல்லப்பிள்ளைகளாகவும் வலம் வரும் நிலையில் நீர் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார்கள் என்ற குற்றங்களைச் சாட்டி பொய்யான வாக்குமூலங்களின் மூலமாக இன்று இவர்கள் சிறையில் வாடுகின்றர்.

இந்நிலையில் விடுதலை கோரிய தமிழ் அரசியல் கைதிகள், பல்வேறான போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் எதுவும் சாத்தியமற்றுப்போயுள்ள நிலையில் 'நல்லாட்சி' என்ற தொனிப்பொருளில் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நம்பியே தமிழர்கள் வாக்களித்திருந்தனர்.

எனினும், அரசு பதிவேற்று பல மாதங்களாகியபோதிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்பிரச்சினை பூதாகாரமாக மாறியிருந்த நிலையில் ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான செய்தியை வெளியிட்டு, உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தியிருந்த போதிலும் அதன் பின்னர் ஜனாதிபதி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மௌனம் காத்ததுடன், ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் வெளிக்காட்டவில்லை.

இவ்வாறான செயற்பாடு ஒரு நாட்டின் தலைவர் மீதுள்ள நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் சிதைக்கும் என்பதுடன், 'நல்லாட்சி' என்ற தத்துவத்துக்கு மாறானதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, ஜனாதிபதி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மௌனம் கலைத்து விரைவான செயற்பாடுகளை முன்னேடுத்து இளமைக்காலத்தை சிறையில் கழிக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கோருகின்றேன்.” என்றுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com