Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையொன்று விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது.

ஆணைக்குழுவிற்கு இதுவரை 1100இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில், 800 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அவற்றில் 300 முறைப்பாடுகள் தமது உள்ளடக்கங்களுக்கு உட்பட்டவை அல்ல என்று தெரிவித்துள்ள அவர், “தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் படி இடைக்கால அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முழுமையான அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com