வடக்கு- கிழக்கில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள ‘கார்த்திகை மாதம்- மரநடுகை மாதம்’ நிகழ்வின் ஆரம்ப வைபவம் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டில் மழை இல்லாமல்போய் விட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விட்டது. நாடு விட்டு நாடு வந்து, கடற்கரையோரங்களில் மிதக்கும் சையிரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் போய்விட்டது.
காட்டு யானைகள் அமைதியாக தங்குவதற்கும், தமக்குரிய உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்ற சூழல் இல்லாமல் போய்விட்டது. இவற்றை மாற்றப்பட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
போர் முடிவிற்கு வந்தபோதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்த கால தவறுகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. ஆண்டவன் படைப்பில் அனைத்து உயிர்களும், அமைதியாக வாழ்வதற்கு உரித்து உண்டு. ஆனால் மனிதர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளினால், இயற்கையின் சமநிலை பாதிப்படைகின்றது.
வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமான காபனைட்கள் சேர்ந்துள்ளதால், பூலோகம் வெப்பமாகி வருகின்றது. மரங்களை நாட்டுவதன் மூலம் காபனைட்சோய்ல் மரங்களினால் உள்வாங்கப்பட்டு, ஒட்சிசன் வாயு வெளியிடப்படுவதனால், உயிரினங்கள் சுவாசிப்பதற்கு தாராளமான வாயுக்கள் கிடைக்க வழி வகுக்கலாம்.” என்றுள்ளார்.
கடந்த காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள ‘கார்த்திகை மாதம்- மரநடுகை மாதம்’ நிகழ்வின் ஆரம்ப வைபவம் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டில் மழை இல்லாமல்போய் விட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விட்டது. நாடு விட்டு நாடு வந்து, கடற்கரையோரங்களில் மிதக்கும் சையிரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் போய்விட்டது.
காட்டு யானைகள் அமைதியாக தங்குவதற்கும், தமக்குரிய உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்ற சூழல் இல்லாமல் போய்விட்டது. இவற்றை மாற்றப்பட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
போர் முடிவிற்கு வந்தபோதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்த கால தவறுகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. ஆண்டவன் படைப்பில் அனைத்து உயிர்களும், அமைதியாக வாழ்வதற்கு உரித்து உண்டு. ஆனால் மனிதர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளினால், இயற்கையின் சமநிலை பாதிப்படைகின்றது.
வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமான காபனைட்கள் சேர்ந்துள்ளதால், பூலோகம் வெப்பமாகி வருகின்றது. மரங்களை நாட்டுவதன் மூலம் காபனைட்சோய்ல் மரங்களினால் உள்வாங்கப்பட்டு, ஒட்சிசன் வாயு வெளியிடப்படுவதனால், உயிரினங்கள் சுவாசிப்பதற்கு தாராளமான வாயுக்கள் கிடைக்க வழி வகுக்கலாம்.” என்றுள்ளார்.




0 Responses to இயல்பு வாழ்வு இன்னமும் திரும்பவில்லை; ‘கார்த்திகை’ மரநடுகை விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் உரை!