Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மிகப்பெரிய கடத்தல்காரர் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பில் உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தோனேஷியாவில் உள்ள தாவூத்தின் கூட்டாளியான சோட்டா ராஜன், இந்திய சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சிபிஐ போலீசார் துருவித்துருவி கேள்வி எழுப்பி வருகின்றனர். தாவூத் இப்ரஹீம் குறித்த அறியவே இந்த விசாரணையைத் துவக்கி உள்ளனர் சிபிஐ போலீசார். இந்தோனேஷிய சிறையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு சோட்டா ராஜனை போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவரிடம் கேள்விகள் கேட்க ஊடகவியாளர்கள் முற்பட்டபோது போலீசார் அனுமதிக்கவில்லை.இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

எனினும் செய்தியாளர்களிடம் பேசிய சோட்டா ராஜன் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்பில் உள்ளார் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.70 நிமிடங்களுக்கும்மேலாக சிபிஐ சோட்டா ராஜனிடம் விசாரணை செய்து வருகின்றனர் என்றும், நாளை அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to தாவூத் இப்ரஹீம் பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பில் உள்ளாரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com