தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை படுகொலை செய்வதற்காக கருணா குழுவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 5 கோடி ரூபாய் வழங்கியதாக நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ரவிராஜ் படுகொலை தொடர்பிலான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, சாட்சியமளித்துள்ள சந்தேகநபர்களில் ஒருவரான அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான லியனாராச்சி அபேரட்ண மேற்கண்ட சாட்சியத்தை அளித்துள்ளார்.
அந்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே நடராஜா ரவிராஜை படுகொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது. அதன்பின்னரே அவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்காக கருணா தலைமையிலான குழுவுக்கு 5 கோடி பணம் கோத்தபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது. இதனை, கருணா குழுவின் வருண் என்பவர் என்னிடம் தெரிவித்தார்.” என்றுள்ளார்.
ரவிராஜ் படுகொலை தொடர்பிலான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, சாட்சியமளித்துள்ள சந்தேகநபர்களில் ஒருவரான அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான லியனாராச்சி அபேரட்ண மேற்கண்ட சாட்சியத்தை அளித்துள்ளார்.
அந்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே நடராஜா ரவிராஜை படுகொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது. அதன்பின்னரே அவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்காக கருணா தலைமையிலான குழுவுக்கு 5 கோடி பணம் கோத்தபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது. இதனை, கருணா குழுவின் வருண் என்பவர் என்னிடம் தெரிவித்தார்.” என்றுள்ளார்.




0 Responses to ரவிராஜை படுகொலை செய்வதற்காக கருணா குழுவுக்கு 5 கோடி வழங்கினார் கோத்தபாய; நீதிமன்றில் சாட்சியம்!