Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும், கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கும் புதிய ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம்,

1. மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

2. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

3. தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. -ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ஆம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஒழுங்கு விதிகள்; ஆடைக் கட்டுப்பாடுகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com