Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்புச் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளார்.

தமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆசியாவின் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com