யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்றி பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்று மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்தவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65,000 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை இன்று வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் வழங்குவதற்கே அரசாங்கம் எண்ணுகின்றது. ஆதலால், மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடாது.
நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படவேண்டும், என்ற நோக்குடன் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. விதவைகள், முகாம்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து இவ்வீட்டுத்திட்டத்தை வழங்குகின்றோம்.
காணியில்லாதவர்கள் தங்களை பிரதேச செயலகங்களில் பதியலாம். அதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும். முகாம் மக்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் இந்த வீட்டுத்திட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். ஒவ்வொன்றாக செய்வோம்.” என்றுள்ளார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்தவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65,000 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை இன்று வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் வழங்குவதற்கே அரசாங்கம் எண்ணுகின்றது. ஆதலால், மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடாது.
நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படவேண்டும், என்ற நோக்குடன் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. விதவைகள், முகாம்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து இவ்வீட்டுத்திட்டத்தை வழங்குகின்றோம்.
காணியில்லாதவர்கள் தங்களை பிரதேச செயலகங்களில் பதியலாம். அதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும். முகாம் மக்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் இந்த வீட்டுத்திட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். ஒவ்வொன்றாக செய்வோம்.” என்றுள்ளார்.




0 Responses to பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் எண்ணமில்லை: டி.எம்.சுவாமிநாதன்