Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் தற்போதைக்கு கருத்து எதனையும் கூற முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்கா கலன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களின் போது சர்வதேச முறைமைகளுக்கு மீறாக இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதனொரு கட்டமாகவே ‘தி ஹார்டியன்’ பத்திரிகையும் புகைப்படங்களோடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்திய விவகாரம்; தற்போது கருத்துக் கூற முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com