திருச்சி ரயில்வே
ஜங்சன் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற டெசோ அமைப்பின் தமிழர் பெருந்திரள்
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
டெசோ
அமைப்பு ஏதோ இன்றைக்கு நேற்று உருவானதல்ல. 1984-ல் டெசோ அமைப்பின்
சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1984, 1986-ல்
தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த
ஆண்டு இந்த டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பித்து, உலகம் முழுவதும் மனித
உரிமைத் தளத்தில் செயல்படும் பல்வேறு அறிஞர்களை சென்னையில் கூட்டி இலங்கைத்
தமிழர் பிரச்னை குறித்து விவாதித்துள்ளோம்.
அதைத்
தொடர்ந்து, அமெரிக்கா, ஜெனிவா போன்ற நாடுகளுக்கு நானும், டிஆர். பாலுவும்
நேரில் சென்று ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து
உலகநாடுகளின் ஆதரவைக் கோரியுள்ளோம். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆட்சியில்
இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர் நலனுக்காக திமுக தொடர்ந்து உழைத்துக்
கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது பிரபாகரனைக் கைது
செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதாதான் இப்போது இலங்கைத்
தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
தமிழர்
முழக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலரும் இன்று திமுகவைக்
குறைசொல்கின்றனர். அரசியல் பேச விரும்பவில்லை. எஞ்சியுள்ள இலங்கைத்
தமிழர்களை காப்பாற்ற வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றார்.




0 Responses to இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்