தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதும் திமுகவையே பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்திருந்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்து கருணாநிதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுடுநீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்" என்பது ஒரு பழமொழி. அது போல முதலமைச்சர் என்ன தான் கொடைநாடு எஸ்டேட்டில் போய்த் தங்கினாலும் பல வகைப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டுள்ள அவருடைய நினைப்பெல்லாம் திமுக கழகத்தின் மீதும் அதன் தலைவனாக இருக்கின்ற என்மீதும் தான் போலும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும் பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் 1998 ம் ஆண்டு கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது முதலமைச்சர் என்ற முறையில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.
14.2.1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ம் திகதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.
மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
மறுநாள் 15.2.1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன். என்னுடன் த.மா.கா தலைவராக இருந்த மூப்பனாரும் வந்தார்.
மேலும் அன்றைய தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், சிறப்புத் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, காவல்துறைத் தலைமை இயக்குநர் எப்.சி.சர்மா மற்றும் உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். ஆகிய அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றேன்.
கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.
மானாமதுரையில் பேசும்போது குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா? என்று கேட்டார்.
என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால் இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா எனவே காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
இதைத்தான் தவறு என்று கூறி முதலமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்திருந்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்து கருணாநிதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுடுநீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்" என்பது ஒரு பழமொழி. அது போல முதலமைச்சர் என்ன தான் கொடைநாடு எஸ்டேட்டில் போய்த் தங்கினாலும் பல வகைப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டுள்ள அவருடைய நினைப்பெல்லாம் திமுக கழகத்தின் மீதும் அதன் தலைவனாக இருக்கின்ற என்மீதும் தான் போலும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும் பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் 1998 ம் ஆண்டு கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது முதலமைச்சர் என்ற முறையில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.
14.2.1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ம் திகதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.
மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
மறுநாள் 15.2.1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன். என்னுடன் த.மா.கா தலைவராக இருந்த மூப்பனாரும் வந்தார்.
மேலும் அன்றைய தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், சிறப்புத் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, காவல்துறைத் தலைமை இயக்குநர் எப்.சி.சர்மா மற்றும் உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். ஆகிய அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றேன்.
கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.
மானாமதுரையில் பேசும்போது குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா? என்று கேட்டார்.
என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால் இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா எனவே காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
இதைத்தான் தவறு என்று கூறி முதலமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.


.jpg)

0 Responses to ஜெயலலிதாவின் நினைப்பெல்லாம் திமுக மீதும், என் மீதும் தான்!: கருணாநிதி