Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை நீதிமன்றங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த சில வருடங்களாகவே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்தனர். இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதை அடுத்து இலங்கையின் அந்தந்த நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாகவும், அவரவர் தங்களது ஆவணங்களை எடுத்து வந்து படகுகளை மீட்டு செல்லலாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு மீனவர்களின் குழுவை, அரசு செலவில் இலங்கைக்கு அனுப்பி .உள்ளது.அங்கு படகுகள் பழுதடைந்து இருந்தால் அதையும் அரசு செலவில் சரி செய்து அனுப்பத் தயாராகவே தமிழக அரசு, மீனவர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை நீதிமன்றம் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com