Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள் என்று ஹரியானா வேளாண் அமைச்சர் சங்கர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

டெல்லியில் ராஜஸ்தான் விவசாயி கஜேந்திரன் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் பெரும் பிரச்சனையைக் கிளப்பி வரும் நிலையில், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் வேளாண் அமைச்சர் சங்கர், தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்துவிட்டு, தங்களது பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க, கடமைகளைத் தட்டிக் கழிக்க குடும்பம் மற்றும் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டனர். சட்டப்படிப் பார்த்தால் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள் என்று கூறியுள்ளார். இது எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

0 Responses to தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள்: ஹரியானா அமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com