Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நாட்களில் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும். அதன் பின்னரேயே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஊடகங்களே அடிக்கடி கலைக்கின்றன. எனினும், அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ அத்தகைய தீர்மானத்தை அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களின் கூற்றுக்கு நாம் பொறுப்பல்ல என தெரிவித்த அமைச்சர், எனினும் பாராளுமன்றம் கலைய வருடக் கணக்காகும் என கூறப்போவதுமில்லை என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட விடயங்களைக் தெரிவித்துள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com