Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மழையால் மும்பை மாநகரமே மிதந்து கொண்டிருக்கையில் அங்கு விஷச் சாராயம் அருந்தி 64 பேர் பலியாகியுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் தென் மேற்கு பருமவமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடி, வாகனங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் சாராயம் அருந்தியவர்கள் திடீரென்று உயிரிழக்கும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதையடுத்து சாராயம் அருந்தியவர்கள் அங்கங்கு நகரின் பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் அபாயக் கட்டத்தில் உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. மும்பையின் வடக்குப் பகுதியில் சாராயம் காய்ச்சிய ஐவர்,, சாரயக்கடை முதலாளி, கைது செயப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

0 Responses to மும்பையில் விஷச் சாராயம் அருந்தி 64 பேர் பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com