Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்துக் குறைந்தன என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எப்போதும் ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை காய்கறிகள் விளைச்சல் வறட்சி காரணமாக குறைந்துவிடும் என்றும், இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்துக் குறைந்து விடும் என்றும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதை மறுக்க முடியாது என்றும் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அப்படிப் பார்க்கையில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் 20 ரூபாயாக இருந்தது இப்போது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், ஒரு கிலோ தக்காளி 15 ரூபாயாக விற்றுக் கொண்டிருந்தது இப்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், கிலோ 30 ரூபாயாக இருந்த முருங்கை தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.அதோடு கிலோ 30 ரூபாயாக இருந்த அவரை தற்போது 40 ரூபாயாகவும்,கிலோ 25 ரூபாயாக விற்ற கேரட் தற்போது 35 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதம் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்துக் குறைந்தன:வியாபாரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com