Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாற்றப்பட உள்ளாரா என்கிற சந்தேகம் எழும்படியாக சோனியா காந்தியிடம் இளங்கோவன் குறித்து தமிழக காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.

டெல்லியில் முகாமிட்டுள்ள ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு,குமரி அனந்தன், வசந்த குமார் , உள்ளிட்ட 11-பேர் கொண்ட குழு, இன்று பிற்பகலில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை சந்தித்துள்ளனர்., அப்போது இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது சரமாரி புகார்களை இவர்கள் அனைவரும் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக இ.வி.கே.எஸ்ஸை நியமித்தது தொடர்பாகவும், அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவதுத் தொடர்பாகவும் மீண்டும் தீவிர ஆலோசனை நடத்த இவர்கள் சோனியாவை வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், தமிழக காஙகிரஸில் இனி அனல் பறக்கும் செயலகளை அவ்வப்போது செய்து சர்ச்சையில் சிக்கிய இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அதிகாரம் குறைக்கப்படுமா, அல்லது பதவி பறிக்கப்படுமா என்கிற கேள்விகள் பூதாகரமாகக் கிளம்பியுள்ளன.

0 Responses to தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com