Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை வாபஸ் பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்கு உண்டான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது என்றும், இந்த மகத்தான தீர்ப்பை எதிர்த்து அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது என்றும் கடித்ததில் குறிப்பிட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணை 15ம் திகதி மீண்டும் நடைப்பெற உள்ள நிலையில், தற்போதைய மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் மானுவை திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை இரத்து செய்யும் தீர்ப்புக்கு எதிரான மனுவை வாபஸ் பெற ஜெயலலிதா கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com