குருநாகல் குளியாபிட்டிய பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பாடசாலை; தற்போது நீக்கியுள்ளது.
அந்தச் சிறுவனின் தந்தை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பாடசாலையும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பாடசாலையொன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது.
உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புக்கு மத்தியில், அவரை அந்தப் பாடசாலையிலிருந்து விலக்கியுள்ளதாக வடமேல் மாகாண சபை கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் படிக்கும் பாடசாலைக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பமுடியாது என்று ஏனைய பெற்றோர் மறுத்திருந்த நிலையில், பாடசாலையை சில நாட்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஏனைய பிள்ளைகளின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பாடசாலையில் வைத்திருப்பது அந்த சிறுவனுக்கு பாதமான நிலைமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே அந்த சிறுவனை அங்கிருந்து விலக்க நடவடிக்கை எடுத்ததாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி, எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வேறு பாடசாலையொன்றில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகனுக்கு 6 வயதாகியும் எந்தப் பள்ளிக்கூடமும் முன்னர் சேர்க்க சம்மதித்திருக்காத நிலையில் நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது தாயார், தனது மகனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதையும் மருத்துவ சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
அதனையடுத்தே, கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் குளியாப்பிட்டியிலுள்ள ஒரு பாடசாலையில் சிறுவனை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து எழுந்த பிரச்சினைகளினால், பாடசாலை சில நாட்கள் மூடப்பட்டிருந்ததால், பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக பாடசாலை நிர்வாகம் மாகாண கல்வி அமைச்சின் உதவியை நாடியது.
பாடசாலை நிர்வாகத்தினருக்கும் மாகாண கல்வி அமைச்சருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஆனாலும், அதை ஏற்க மறுத்த பெற்றோர் சிறுவனை தொடர்ந்தும் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். பெற்றோரிடமிருந்து வந்த தொடர் எதிர்ப்பை அடுத்து, சிறுவனை பாடசாலையிலிருந்து விலக்கிக்கொள்வதாக மாகாண கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், அமைச்சரின் இந்த முடிவுக்கு அப்பகுதி சுகாதார அதிகாரிகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனுக்கு வேறொரு பாடசாலையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி இல்லை என தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் ஜி.வீரசிங்க தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
அந்தச் சிறுவனின் தந்தை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பாடசாலையும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பாடசாலையொன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது.
உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புக்கு மத்தியில், அவரை அந்தப் பாடசாலையிலிருந்து விலக்கியுள்ளதாக வடமேல் மாகாண சபை கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் படிக்கும் பாடசாலைக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பமுடியாது என்று ஏனைய பெற்றோர் மறுத்திருந்த நிலையில், பாடசாலையை சில நாட்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஏனைய பிள்ளைகளின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பாடசாலையில் வைத்திருப்பது அந்த சிறுவனுக்கு பாதமான நிலைமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே அந்த சிறுவனை அங்கிருந்து விலக்க நடவடிக்கை எடுத்ததாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி, எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வேறு பாடசாலையொன்றில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகனுக்கு 6 வயதாகியும் எந்தப் பள்ளிக்கூடமும் முன்னர் சேர்க்க சம்மதித்திருக்காத நிலையில் நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது தாயார், தனது மகனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதையும் மருத்துவ சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
அதனையடுத்தே, கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் குளியாப்பிட்டியிலுள்ள ஒரு பாடசாலையில் சிறுவனை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து எழுந்த பிரச்சினைகளினால், பாடசாலை சில நாட்கள் மூடப்பட்டிருந்ததால், பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக பாடசாலை நிர்வாகம் மாகாண கல்வி அமைச்சின் உதவியை நாடியது.
பாடசாலை நிர்வாகத்தினருக்கும் மாகாண கல்வி அமைச்சருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஆனாலும், அதை ஏற்க மறுத்த பெற்றோர் சிறுவனை தொடர்ந்தும் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். பெற்றோரிடமிருந்து வந்த தொடர் எதிர்ப்பை அடுத்து, சிறுவனை பாடசாலையிலிருந்து விலக்கிக்கொள்வதாக மாகாண கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், அமைச்சரின் இந்த முடிவுக்கு அப்பகுதி சுகாதார அதிகாரிகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனுக்கு வேறொரு பாடசாலையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி இல்லை என தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் ஜி.வீரசிங்க தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.




0 Responses to எச்.ஐ.வி. தொற்று வதந்தி; குருநாகல் குளியாப்பிட்டிய சிறுவன் பாடசாலையிலிருந்து நீக்கம்!