Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கட்சியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு 35க்கும் அதிகமாக ஆயுதமேந்திய பொலிஸாரும், ஆயுதமற்ற 15க்கும் மேற்பட்ட பொலிஸாரும் பாதுகாப்பு வழங்கினர்.

அதுபோல, கொலை அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்குமான இந்தப் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்ந்தும் இருக்குமா என்பது தொடர்பில் பொலிஸாரோ, சட்டம் ஒழுங்கு அமைச்சோ, பாதுகாப்பு அமைச்சோ இன்னமும் ஊடகங்களுக்க எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

0 Responses to விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com