Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 03) முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் அமுலாவது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்கிறது. அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com